அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

ஒளவை

பூமித்தாய்
…………………
அழகிய பூமியில்
அனைத்துமே அழகு
பழகிடும் தன்மையில்
பாசத்தைக் காட்டும்
வழங்குதே இன்பங்கள்
வள்ளலாய் எமக்கு
இழந்திட வேண்டாம்
இன்னல்கள் புரிந்து

மண்ணிற்கும் மனது
மறைவாய் உண்டு
எண்ணத்தைப் புரிந்தால்
ஏற்றங்கள் தருமே
கண்ணாய் நம்மைக்
காத்திடும் பூமியை
பண்பாய் நடத்திப்
பெருமை கொள்வோம்

வானும் நிலவும்
வளியும் நமக்கு
வாரி வழங்கி
வசந்தம் பெருக்க
ஈனப் பிறப்பாய்
இருக்கும் நாமோ
மானங் கெட்டு
மறந்தோம் அன்பை

காலம் என்றும்
கடமையைச் செய்யும்
ஞாலம் நம்மை
நட்பாய் அணைக்கும்
வாதம் புரிதல்
வன்மம் அன்றோ
பாதம் பணிந்தால்
பாரில் இன்பமே.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading