சிவா சிவதர்சன்

வாரம் 183
“பறவைகளின் போதனை”

வண்ண வண்ணப் பறவைகள் யாம்
வானில் உயரப் பறக்கின்றோம்
வாழ்வில் உயர்ந்து நிற்கின்றோம்
தீமைகள் வாழ்வில் புரிந்தறியோம்

தினமும் உணவு தேடி அலைந்திடுவோம்
கூடுகட்டி வாழ்ந்தாலும் குறைகளின்றி வாழ்கின்றோம்
ஆறறிவு பெற்ற மனிதன் நீ ஆசா பாசங்களில் அலைகின்றாய்
தாழ்ந்த வாழ்க்கை வாழுகின்றாய் தரையில் கிடந்து உழல்கின்றாய்

நல்லவை தீயவை பேதங்காண மறுக்கின்றாய்
இன மத மொழியென இறுமாந்து திரிகின்றாய்
எமக்கோ எம்மவர் யாவரும் ஓரினம்,பறவையினம்
மனிதா இனத்தால் ஒன்றுபடு
என்றும் உயர்வாய் வாழ்ந்திடலாம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading