திருமதி .அபிராமி கவிதாசன்.

27.09.2022

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -192

“மழைநீர்”

மழைநீர் நீயே
மண்ணின் உயிர்நீர்
விழிநீர் துடைப்பாய்
விண்ணின் துளிர்நீர்

பௌவமே பிறப்பிடம்
பாய்ந்தோடி அடைக்கலம்
ஆதியும் அந்தமும்
அங்கேதான் சங்கமம்

வாடிய பயிருக்கு
வள்ளல் நீர்அன்றோ
ஓடியே உயிர்காக்கும்
உன்னத உறவன்றோ

ஆலங்கட்டி நீபெய்தால்
ஆகாயம் ஏந்திடுமே
ஓலக்குடிசை மக்களுக்கும்
உள்மெல்லாம் மகிழ்ந்திடுமே

மண்வாசம் வீசிடும்
மழைத்துளி தொட்டிட
வண்ணமாய் வாழ்வுதரும்
வாழ்க்கை செழித்திட

நன்றி பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading