பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 95

தேடும் விழிக்குள் தேங்கியவலி

தேடும் விழிக்குள் தேங்கியவலிக்கு
மருந்திட்டு மாறிடுமா?
மாத்து கழிப்பு செய்து
போக்கிடலாமா?

ஆண்டாடு காலமாக
தேக்கி வைத்த
ஆதங்கத்தை ஆராத
மன கொதிப்பை

விழி சிந்தும் கண்ணீர்
மொழி இன்றி
கூறும் வலியை
பலம் இன்றி
பல நாளயாய்

பயந்து மனம்
பாடுபடும்
ஏக்கத்தை ஆற்ற வழியின்றி
தேக்கி நிற்கும்
தேடும் விழிகள்
கூறு கதையை

காலங்கள் கூறிடுமா?
காரணங்களைக் தேடி!!!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading