Selvi Nithianandan

புலத்திலும் தொலைத்த பாசம் ( 539)

பணத்துக்காக ஓடும் வாழ்வு
பாசம் என்ற வேசம் காட்டி
பரிதவிப்பில் வாழ்வும் வாடி
பரிவு இப்போ இருளாய் மூட்டம்

புலத்து வாழ்வில் மாற்றம் கூடி
புலம்பி புலம்பி வித்தை காட்டி
புயல் காற்றாய் புகழாரம் சூட்டி
புவனத்தில் பவனியாகும் கூட்டம்

பணமென்றால் இணைவு பெருகி
இல்லை என்றால் உறவு விலகி
அக்கா தங்கை பந்தம் எல்லாம்
அன்பு பாசம் அறுத்த திட்டம்

சொந்த பந்தம் தொலைத்த போதும்
சொன்னா உதவ பணமே மூச்சு
பக்க துணையாய் இப்போ பலராய்
பரிதவிப்பில் வாழ்வும் நகர்வே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading