பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

யோசி

உன்னால் முடியும் துணிந்தே தொடங்கு
பின்னால் கிடைக்கும் உயர்ச்சியும்
பன்மடங்கு
யோசி முடிந்தால் வானமும் வசப்படும்
நேசி வாழ்க்கையை உற்சாகம் துளிர்விடும்

ஏற்றத் தாழ்வுகளூடே வாழ்க்கைப் பயணம்
ஏற்றுக்கொண்டே தொடர்ந்து அடைந்துவிடு பயனும்
ஆயிரம் ஆச்சரியங்களை வைத்துள்ளது ஒழித்து
ஆயினும் சோம்பிடாது இருந்துவிடு விழித்து

துன்பங்கள் உன் வாழ்க்கையின் வழிகாட்டியே
உன்னை இக்கட்டில் விட்டுவிடும் மாட்டியே
இறைவன் அளந்த அளவினைக் கொண்டு
தரைமீது வாழ்ந்துவிடு சிறப்பினைக் கண்டு

தோல்விகள் உண்மையில் கற்றுக்கொடுக்கவே வருகின்றது
வாழ்வை சரிசெய்து புரிதலைத் தருகின்றது
சிந்தித்துப்பார் சோம்பேறிகளிற்கு அனைத்துமே கடினம்
மந்தநிலை நீங்கிடவே காட்டிவிடு துடினம்

ஜெயம்
24-01-2023
https://linksharing.samsungcloud.com/cCARIngQk2oI

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading