பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026

ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின் தோற்றத்தை வரலாற்றை
எமக்கெல்லாம் எடுத்தியம்புவது எழுத்தாணிகளே
வரலாற்றின் ஊற்றுக்கள் எழுத்துக்களே
எழுத்தாணிகள் பதியமிடட்டும்
எழுத்துக்கள் விதைக்கப்படட்டும் !

எழுத்தாளர் வாரமதில் எழுத்தோடு முதலாகி
ஏற்றங்கள் பலவாகி படைப்புக்கள் பல்லாயிரமாகி
பாமுகப்பரப்பு சரிதமாகிறது இணையத்தில் பதியமாகி
படைப்புக்கள் நிறையட்டும் பாரெல்லாம் பரவட்டும்
தலைமுறைகளின் விரல்நுனிகளில் தமிழ்த்தேன் பதியமாகட்டும் !

இன்றைய பதியமிடும் எழுத்தாணிகளே
நாளைய சமுதாயத்தின் விடியலின்தீபங்கள்
கணணித்திரையிலும் காகிதப்பக்கத்திலும் பதியமிடுங்கள்
தோட்டாவைவிட தூரிகைபிடிக்கும் கையேவலிமை
பதியமிட்ட செடியாக எழுதத்தொடங்குங்கள்
நாளைய இலக்கியசோலையின் நாயகர்கள் நீவிரே !

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading