இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 210

*”ஊக்கி”*

*”ஊக்கமது கைவிடேல்”* எனக்கூறும் ஔவையின் அனுபவம்
ஊக்கமதை எனக்குள் வளர்த்த ஊக்கியாம் அன்னையேஎன்உலகம்
அறிவை வளர்த்து ஊக்கத்தையும் வளர்த்ததாயவள்
நம்பகமான ஊக்கியின் துணையால் என்வெற்றி நிச்சயம்

எங்கள் வீடுகளில் கொண்டாட்டம் மது அரக்கனும்பிரசன்னம்
புகைமண்டலமும் மதுநெடியும் மனித மனநலத்தின் அஸ்தமனம்
மனித சிந்தனையின் அளவியல்பதிவுகளே தத்துவம்
தீயன பார்ப்பதுவும் கேட்பதுவும் பழகுவதும் தீமையேபயக்கும்

நல்லதுகெட்டது பேதம் புரிந்து உணரவைத்தது அன்னையெனும்தெய்வம்
ஊக்கமும் ஆக்கமும் தந்து மனநிறைவைவழங்கிய பெண்களின்திலகம்
பெற்றதாயே ஊக்கியாக உதவும்வேளை வெற்றிநிச்சயம்
காலமறிந்து கருமமாற்ற உடனிருந்து கண்காணித்து ஊக்குவிக்கும்தாயவள் சுயநலமேஅற்ற உண்மையான ஊக்கி!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading