நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

சக்தி சக்திதாசன்

கவிதைக்கோர் தினமெனில்
கவிதையிலாத் தினமுண்டோ?
கவிதையோடு விழித்திடுவேன்
கவிதையோடு உறங்கிடுவேன்

கவிதையே வாழ்வாகவே
கண்டிட்ட கவிஞனெங்கள்
காவியத் தலைவனென்போம்
கவிதைக்கோர் பாரதியே !

கவித்துவத்தை தன்னகத்தில்
கணக்காகக் விதைத்திட்டவன்
கவியாக்கிக் களித்திட்டோன்
கவியரசர் கண்ணதாசன்

காசினியில் ஓர்தினமின்று
கவிதைக்கு கொடுத்திட்டார்
கவிதைகளாய் சிந்திக்கும்
கவியலைகள் ஆர்ப்பரிக்கும்

கவிதையாக தாய்த்தமிழதுவே
கவிதையில் தவழ்ந்திடும்
கவிதையில் மலர்ந்திடும்
கவிதையாகவே சுரந்திடும்

கவிதைகள் கனத்திடும்
கவிதைகளாய்ப் பொழிந்திடும்
கவிதைகளே தினந்தினம்
களிப்புடனே கவிந்திடும்

உலகத்தோர் அனைவரும்
உணர்வோடு கொண்டாடும்
உலகக் கவிதைத்தினமதில்
உதிர்க்கின்றேன் வாழ்த்துகளை

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan