சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

இரா.விஜயகௌரி

நிலையற்ற யாக்கை…….

பூமிப்பந்தொரு. வாழ்க்கை
புதிதென தினமும் மாற்றம்
அறியாப். பெருந்நொடி
தெரியா முகங்களாய். திருப்பம்

புரியா மனிதர்களாய் நாம்
நிலையென. எண்ணி நிதம்
நிலையா உலகினில். ஓட்டம்
கலையும். கனவாய். தொடரிது

சேர்த்துச் சேர்த்து சேமிப்பில் இட்டு
உண்பதும் இன்றி உடுப்பதும் இன்றி
நாளைப்பொழுதினைக் கணக்கினிலிட்டு
மூட்டை கட்டிடும் முட்டாள்கள் நாம்

மூச்சை இழுக்க முனைய மறுத்தால்
இதயக்கதவு இயல்பினை மறக்கும்
காற்றின் பெருநொடி. கலங்கி நின்றிடின்
கனக்கும் பெருவெளி நிலையை இழக்கும்

அட்டா வாழ்வு இதுவென உணரின்
எதற்கென ஓட்டம் இயல்பை மறந்து
பொருள்பட எழுதி புரிந்து வாழ்ந்து
நொடிகளை எல்லாம் வாழ்வாய்ச் சமைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading