அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

20.04.23
ஆக்கம்-265
ஏங்கும் மனம்
உயிரில் உரிமையுடன் ஊக்கமிட
பயிரை வளர்த்துப் பார்ப்பது போல்
புத்துயிர் தந்து சத்துயிராக்கினாள்

எத்தனை துன்பம் வந்திடினும்
அத்தனையும் இன்பமாக்கினாள்

அன்பே இன்பமயம்
அவளோ தெய்வமயமாய்
எனக்கு அன்னை ஆனாள்

என் கண்ணிற்கு ஒளியூட்டி
தன் நெஞ்சில் நிறுத்தி
அன்புக்கு இலக்கணம் ஆனாள்

என் ஒவ்வோர் அசைவிலும்
பரவசமூட்டி கண்ணை இமை
காப்பது போல காவலாளியானாள்

எங்கு பார்த்தாலும் அவள் முகமே
ஏதோ மனம் ஏங்குதே என்றும்
என்னுடன் வந்திடு என்று

நன்றியாய் ஒன்றே ஒன்று -அது
கண்ணில் நிறையும் அந்தக்
கண்ணீரே காணிக்கை .

Nada Mohan
Author: Nada Mohan