தேவன் திரு

எத்தனை எத்தனை ஆற்றல்களை!
எம்தலைவன் படைத்து நின்றான்
அத்தனை ஆற்றல்களும் மொத்தமாய்
மொளனித்தபடி கிடக்க
எவன் எவனே கைகள் ஓங்கி
எம் இனத்தின்
அழிவிற்கான ஆற்றல்கள்
வளர்த்துக்கொண்டே போகிறது.

கடந்தகாலங்களை
கட்டுப்பாடாய் கண்ணியமாய்
கடந்த எங்களுக்கு
இன்று நடக்கும் அவலங்கள்
ஆன்மாவையே உலுப்புகின்றது.

கொலைகளுக்குள்ளும்
கொள்ளைகளுக்குள்ளும்
நிறைந்து கொண்ட ஈழமதில்
நிறைந்த போதையில்
விறைப்பாகி போன உணர்வுகளால்
உறையவைக்கும் சம்பவங்கள்
தினம் தினம் அரங்கேறுகின்றது.

எமை காக்கும் ஆற்றலோடு
எவருமில்லையே இன்று
வலிகளோடு எம்மினம்
நாளும் நலிந்தே போகிறது
இதில் எமக்கான ஆற்றல்களை
நாம் எங்கே வளர்த்து
வாழ்வில் உயர்ந்திட

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading