தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 650

வளர்ந்த பிள்ளைகள் தாமே ஞ

அக்கறை எடுக்கின்றார் வளர்ந்தும் பிள்ளைகள்
பக்கத்தில் இருத்தியே தாண்டாது எல்லைகள்
இக்காலம் கெட்டுக் கிடக்கின்றதே அதனாலோ
அக்கால ஒழுக்கத்தை கடைப்பிடிக்க இதனாலோ

வளந்தவர்தாமே தம்மைத்தாம் பார்த்துக்கொள்ள மாட்டார்களா
உலகத்து அறிவுகளை பெறாதுதான் விட்டார்களா
அளவில்லா கரிசனமும் ஆரோக்கியத்தை தாராது
அளவின்றி நீரிறைத்தால் அழுகாத வேரேது

முளைவிட்ட செடிக்குத் தெரியாதோ கிளைவிட
கிளைகளில் பழங்களை எங்கேயென்று வெளிவிட
சின்னவர்கள் அவர்கள் என்பது தப்புக்கணக்கு
எண்ணங்கள் தெளிவடையின் இல்லையிங்கு பிணக்கு.

  ஜெயம்
27-04-2023

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading