10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
சந்தம் சிந்தும் கவிக்காய் ,
திருமதி சிவமணிபுவனேஸ்வரன். சுவிஸ் இல் இருந்து.
*நடிப்பு*
பாவினால் ஆடியே பரப்பிய கூத்திலும்
காவியக் கதைகளின்
கருப்பொருள் உருவிலும்
முத்தமிழ் வடிவினில்
முழுமனம் ஆண்டிட
இத்தரை வந்தநல்
இனிய நற் கலையே
ஒப்பனை ஓங்கிடும் ஒருவடிவாகும்
ஒப்புயர் மாந்தரை
உணர்வினில் இருத்தும்
செப்பிடும் மொழிவழி செம்மையும் சேர்த்து
இப்புவி மாந்தரை
ஈர்த்திடும் கலையே
அக்கமும் பக்கமும்
அன்பாய் அழைக்கும்
சிக்கலும் செம்மையும்
சிறப்பாய் சொல்லும்
மக்களை நல்வழிப் படுத்தும் கலையே
திக்கெலாம் படர்ந்த
செந்தமிழ்க் கலையே
தங்கியே நிலைத்தால்
தரணியும் மகிழும்
மங்கியே போனால்
மகிமை என்னாகும்
பங்கினை எடுப்போம்
பரிசாய் கொடுப்போம்
அங்கமும் ஆகி
ஆதரித்து அணைப்போம்.

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...