மாறியதே வாழ்க்கை

நகுலா சிவநாதன் மாறியதே வாழ்க்கை மாறியதே வாழ்க்கை மனம்போன போக்கிலே! கூறியதே கதைகளும் குழம்பிய குட்டைகளாய் வெப்பத்தின் அதிகரிப்பாய் வேறிட வாழ்க்கையும் இன்று தெப்பமாய்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காய் ,
திருமதி சிவமணிபுவனேஸ்வரன். சுவிஸ் இல் இருந்து.

*நடிப்பு*

பாவினால் ஆடியே பரப்பிய கூத்திலும்
காவியக் கதைகளின்
கருப்பொருள் உருவிலும்
முத்தமிழ் வடிவினில்
முழுமனம் ஆண்டிட
இத்தரை வந்தநல்
இனிய நற் கலையே

ஒப்பனை ஓங்கிடும் ஒருவடிவாகும்
ஒப்புயர் மாந்தரை
உணர்வினில் இருத்தும்
செப்பிடும் மொழிவழி செம்மையும் சேர்த்து
இப்புவி மாந்தரை
ஈர்த்திடும் கலையே

அக்கமும் பக்கமும்
அன்பாய் அழைக்கும்
சிக்கலும் செம்மையும்
சிறப்பாய் சொல்லும்
மக்களை நல்வழிப் படுத்தும் கலையே
திக்கெலாம் படர்ந்த
செந்தமிழ்க் கலையே

தங்கியே நிலைத்தால்
தரணியும் மகிழும்
மங்கியே போனால்
மகிமை என்னாகும்
பங்கினை எடுப்போம்
பரிசாய் கொடுப்போம்
அங்கமும் ஆகி
ஆதரித்து அணைப்போம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading