04
Jun
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
04
Jun
“தாயுமானவர்”
நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன்...
கீத்தா பரமானந்தன்
நடிப்பு !சந்தம் சிந்தும்சந்திப்பு
கள்ளமே உருவாய்க் கணமெலாம் அரங்கேறிக்
காலமும் தொடரும் காத்திரமாம் படைப்பு!
உள்ளத்தை மறைத்து உதட்டின் பசப்பால்
உணர்வினை வாட்டும் ஒப்பற்ற நடிப்பு!
மேடைகள் இன்றே மிளிர்கின்ற வனப்பு
மேதினி மனிதரின் மேலாம் வரிப்பு!
சோடையே யின்றிச் சொரிகின்ற பரிவில்
சொருகுறார் வாளினை சொடிக்கிடும் நொடிக்குள்!
நாளிலும் பொழுதிலும் நரித்தனம் நிறைப்பு
நம்பியே வீழுதல் நலிவற்றுத் தொடர்வு!
ஆறறி வென்றுமே. அனுதினம் பசப்பு
ஆற்றிடும் செயலதோ ஆழக்குழி பறிப்பு!
ஒட்டியே அழிக்கும் ஒட்டுண்ணி போலே
ஒன்றியே புதைக்கும் ஓங்கிய நடிப்பில்
பட்டமே வாங்காப் பண்டிதர் என்றே
பச்சோந்திக் கூட்டம் பரவியே நின்று
சத்தமே இன்றி வீழ்த்துவர் நொடியில்
சாதனை காணாச் சரித்திர நடிப்பில்!
கீத்தா பரமானந்தன்
03-05-2023

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...