மாறியதே வாழ்க்கை

நகுலா சிவநாதன் மாறியதே வாழ்க்கை மாறியதே வாழ்க்கை மனம்போன போக்கிலே! கூறியதே கதைகளும் குழம்பிய குட்டைகளாய் வெப்பத்தின் அதிகரிப்பாய் வேறிட வாழ்க்கையும் இன்று தெப்பமாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

நடிப்பு !சந்தம் சிந்தும்சந்திப்பு

கள்ளமே உருவாய்க் கணமெலாம் அரங்கேறிக்
காலமும் தொடரும் காத்திரமாம் படைப்பு!
உள்ளத்தை மறைத்து உதட்டின் பசப்பால்
உணர்வினை வாட்டும் ஒப்பற்ற நடிப்பு!
மேடைகள் இன்றே மிளிர்கின்ற வனப்பு
மேதினி மனிதரின் மேலாம் வரிப்பு!
சோடையே யின்றிச் சொரிகின்ற பரிவில்
சொருகுறார் வாளினை சொடிக்கிடும் நொடிக்குள்!

நாளிலும் பொழுதிலும் நரித்தனம் நிறைப்பு
நம்பியே வீழுதல் நலிவற்றுத் தொடர்வு!
ஆறறி வென்றுமே. அனுதினம் பசப்பு
ஆற்றிடும் செயலதோ ஆழக்குழி பறிப்பு!
ஒட்டியே அழிக்கும் ஒட்டுண்ணி போலே
ஒன்றியே புதைக்கும் ஓங்கிய நடிப்பில்
பட்டமே வாங்காப் பண்டிதர் என்றே
பச்சோந்திக் கூட்டம் பரவியே நின்று
சத்தமே இன்றி வீழ்த்துவர் நொடியில்
சாதனை காணாச் சரித்திர நடிப்பில்!

கீத்தா பரமானந்தன்
03-05-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading