பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சித்தும் சந்திப்பு – 224

தலைப்பு – மூண்ட தீ

வேண்டுவோர்க்கு ஒளிகொடுத்து வாழவைத்த ஒளியகத்தை
வேண்டுமென்று தீமூட்டி வீழ்த்திய மூடர்களை
ஆண்டவனே அறியாயோ ஏனென்று கேளாயோ
மீண்டும் நாசங்கள் முளைக்காது நசிக்காயோ.

மாதங்கள் ஆண்டுகளாய் மறைந்து சென்றாலும்
வேதனைகள் வேர்விட்டு வாட்டத்தை வளர்க்கிறது
ஆதங்கம் அகலாது அவலநிலை தொடர்கையிலே
பூதலத்தில் ஆண்டவனே அமைதியொளி தாராயோ?

தீபத்துடன் தூயோர்கள் திருக்குறளைப் படித்திடுவர்
தீபத்தால் தீயோர்கள் திருவூரையும் எரித்திடுவர்
ஆபத்தை உணர்ந்து அன்புக்கரம் நீட்டிடுவோம்
தீபமாய் எல்லோர்க்கும் அருளொளியை வழங்கிடுவர்.

நன்றி. வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(29/05/2023)

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading