திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சித்தும் சந்திப்பு – 224

தலைப்பு – மூண்ட தீ

வேண்டுவோர்க்கு ஒளிகொடுத்து வாழவைத்த ஒளியகத்தை
வேண்டுமென்று தீமூட்டி வீழ்த்திய மூடர்களை
ஆண்டவனே அறியாயோ ஏனென்று கேளாயோ
மீண்டும் நாசங்கள் முளைக்காது நசிக்காயோ.

மாதங்கள் ஆண்டுகளாய் மறைந்து சென்றாலும்
வேதனைகள் வேர்விட்டு வாட்டத்தை வளர்க்கிறது
ஆதங்கம் அகலாது அவலநிலை தொடர்கையிலே
பூதலத்தில் ஆண்டவனே அமைதியொளி தாராயோ?

தீபத்துடன் தூயோர்கள் திருக்குறளைப் படித்திடுவர்
தீபத்தால் தீயோர்கள் திருவூரையும் எரித்திடுவர்
ஆபத்தை உணர்ந்து அன்புக்கரம் நீட்டிடுவோம்
தீபமாய் எல்லோர்க்கும் அருளொளியை வழங்கிடுவர்.

நன்றி. வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(29/05/2023)

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading