திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்பிற்காய்
சிவமணி புவனேஸ்வரன்.
தலைப்பு
*ஆறுமோ ஆவல்*

கூறும்பல் மொழிகளில் குன்றெனத் திகழ்வளர்
குவலயத் தமிழ்மொழியே

சாறெனப் பழச்சுவை சாற்றிட இனித்திடும்
சங்கத்தமிழ் அணங்கே

ஊறும் உணர்வினில் உள்ளத்தில் உதித்துமே
உண்மைகள் சொன்னவளே

பேறென வாய்த்துமே பெருமகிழ்வு ஊட்டியே
பேதையெனை ஈர்த்தவளே

தேறிட என்மனம் தேற்றிடும் வகையினில்
தேடிட அணைந்தவளே

மாறிடும் உலகினில் மாற்றங்கள் இன்றியே
மாண்பினில் காத்தவளே

வீறுகள் கொண்டுமே வீழ்ந்திடா வண்ணமே
விந்தைகள் புரிபவளே

ஆறுமோ ஆவலும் அறிந்திட உன்னையே
ஆற்றுவாய் அன்னையே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading