அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

ரஜனி அன்ரன்

எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே ! கவி…ரஜனி அன்ரன் (B.A) 08.06.2023

மொழியின் மூலம் எழுத்தே
எழுத்தின் வித்தே மொழிக்கு ஆதாரம்
இலக்கினை நோக்கிய பயணமதில்
எழுத்தோடு பூத்தது முதல்ஒலி
எழிலோடு பதித்தது தடம்
எழுத்தினை விதைத்து வித்தினைப் பதித்து
விருட்சமாகி விழுதுகள் தாங்கி
விசாலமாகி பூத்துக் குலுங்குது தமிழ் !

பாமுகத் தோப்பு பலரது இணைப்பு
இளையவர் தொகுப்பு
இனிமைத் தமிழின் தொடுப்பு
இணைய வழியும் கைகொடுப்பு
இதனால் பல்கிப் பெருகியதே படைப்பு
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழ் !

புலத்திலே பூத்தது எழுத்திலே முதல்ஒலி
பாரெல்லாம் ஒளிருது பாமுக ஒலிஒளி
புலத்திலே தனித்துவம் எழுத்திலே மகத்துவம்
படைப்புக்கள் பலவிதம் ஒவ்வொன்றும் தனிரகம்
அர்ப்பணிப்போ ஆயிரமாயிரம்
ஆக்கங்களின் உருவாக்கமோ பல்லாயிரம்
அத்தனையும் பதியங்கள் ஆகா இதுவல்லோ அதிசயம்
எழுத்திலே பூத்திட்ட எழிலான காவியம் !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading