திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(106) 22/06/23
அகதி நாம் பெற்ற வரமா????

சொந்த மண்ணிலே சுதந்திரமாய்
வாழ்ந்த காலம்
போர்க்கால சூழலிலே கடல் கடந்து
அயல்நாட்டில்அடைக்கலமானோம்

அகதி வாழ்வின் அவதி
இதுவோ நம் விதியென
கலங்கி வாழ்ந்த காலம்
விடியலுக்காய் ஏங்கி

கண்டம் விட்டு கண்டம் கடந்து
வெளி நாட்டில் தஞ்சம் கொண்டோம்.
மொழி இன மாறு பாடு
பெருந் தாக்கமாய் அச்சுறுத்த

மனித நேயக் கரங்கள்
அபயம் தர
நம்பிக்கைப் பூக்கள்
சில்லெனப் பூத்தது எம்மனதில்

நிலையான வதிவிடம்
நிரந்தர வேலை வாய்ப்பு
பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி
நிம்மதியான வாழ்வு&

இதுவே இன்று நிரந்தரமாச்சு
தலை முறைகளும் உருவாச்சு
அகதி வாழ்வு தந்த வரம்
நாமும் இந்நாட்டு மக்களே
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading