ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

11.07.23
கவி இலக்கம்-109
பாட்டி

குழந்தை ஒன்று பிறக்கையில்
கூடவே பாட்டியும் புதிதாய்ப்
பிறக்கிறாள் என்றாரே
பெண் கவிஞர் அலைஸ் வாக்கர்

பட்டுப் புடவையை கொசுவமிட்டு
உடுக்கும் பாட்டியும் சரிகை
வேட்டி மீசைத் தாத்தாவும்
கூட்டுக் குடும்பமானால்
குதூகலமே

பாட்டி சுட்ட வடையைக்
கோட்டை விட்ட காக்கா
எடுத்துக் கொண்டு காட்டுள்
ஓடிய தந்திர நரி கதை
கேட்டதும் ஆனந்தமே

போட்டி நாட்டும் பழமொழி
வாட்டி விடும் விடுகதை
சொடுக்குப் போட்டால்
சிறுவருக்கு இரட்டிப்பு
மகிழ்வே

தடுக்குப் பாய் உழைத்து
தம்பி தங்கை அதில் கிடத்தி
பார்த்துச் சிரிக்கும் புன்னகை
பாட்டிக்கும் பேரானந்தமே

கொட்டைப் பாக்கு வெற்றிலை
போட்டு கட்டை விரல் அமத்தி
உரலில் இடித்து பொக்கை
வாயில் சப்பித் துப்பும்
பாட்டியின் அழகுச் சிரிப்போ
அழகு .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading