பல தேவகஜன்

பறவைகள் சிறகடித்து
வானவெளியில் பறக்க
சிறு கீற்றாய் சூரிய ஒளி
உலகம் எங்கும் பரவ
வெட்கம் கொண்ட
மேகக்கூட்டம்
விலகியே ஓடிவிட
புலர்ந்தது காலை
புதுப் பொலிவோடு.

இடை நெளிந்து
உடல் வளைந்து
நிமிர்ந்து நிற்க்கும் மரங்கள்
உரிமையோடு உட்கார்ந்து
இசைபடிக்கும் குயில்கள்
அழகுடனே தலையசைத்து
மலர் தூவும் இலைகள்
அதிகாலை பொழுதுக்கு
அர்ச்சனை தூவும் குருக்கள்.

ஊருக்கு குறுக்கே ஓடும்
கறுப்புத்தார் ரோட்டு
உடல் முழுக்க ஈரமாகி
தலை குனியும் புல்லு
நீட்டி நிமிர்ந்து நிற்க்கும்
அணையாத மின்கம்பம்
புலர்கின்ற காலைக்கு
தீபமிடும் பூசாரி.

ஆங்காங்கே அசையத்தொடங்கும்
மனித வலுக்கூ ட்டம்
அவர்களை ஏத்திச்செல்லும்
வாகனங்களின் சத்தம்
ஒருக்காலும் நின்றதில்லை
நிதானமாய் பார்த்ததில்லை
அழகாக புலர்கின்ற
அதிகாலை பொழுதுதனை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading