இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ஒளவை

இயற்கை
———————
இறைவன் படைத்த
இனிய சொத்தே
குறைகள் இல்லாக்
கொடையே எமக்கு
கறைகள் தந்து
கர்வம் கொண்டோம்
மறைவாய் எம்மை
மரணம் தொடருதே

பிரபஞ்ச சக்தி
பரந்த பூமியில்
சிரமங்கள் இன்றி
சிறப்பாக வாழ்ந்திட
வரமாகக் கிடைத்த
வளமே இயற்கை
பரமனும் தந்தான்
பகுத்தறிய மறந்தோம்

இயந்திர மயத்தில்
இயற்கையை அழித்தோம்
இயல்பை மாற்றி
இன்பத்தைத் தேடினோம்
செயற்கை வழியில்
செயல்கள் புரிந்தோம்
இயல்பு வாழ்வின்
இனிமை இழந்தோம்

வேற்றுக் கிரகத்தில்
வாழ்ந்திட ஆசையில்
காற்றில் கூடக்
கலந்தோம் நச்சு
மாற்றமோ எங்கும்
மனிதன் செயலால்
ஈற்றில் நாமே
தோற்றுப் போகிறோம்.

ஔவை.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading