அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

நகுலா சிவநாதன்

காலநிலை

பருவ காலம் பொய்த்து இன்று
பொழியும் மழையும் அதிகம் பாரீர்
கருவம் இல்லா இயற்கை தன்னில்
கலகம் வருவது எதனாலே?
உருவம் இல்லா நீரும் உருளுது
உலகம் வியக்கும் மழையாலே
அரும்பும் இதழில் துளிர்க்கும் நீரும்
ஆகுதியாகிய நீராலன்றோ!

அண்டம் காணும் வெப்பம் கூடி
கண்டம் எல்லாம் வரட்சிகண்டு
நீரும் இன்றி தவிக்கும் காலம்
நினைத்துப் பார்க்க முடிவதில்லை
கூறு போட்டு பிரிக்கும் காலநிலை
மாறுபடும் காலம் வருமா?
மகிழ்ந்து வாழ மக்கள் இன்று

பாதுகாக்கா இயற்கை தன்னால்
பாய்ந்து வரும் நீரும் முடக்கம்
நெகிழி பைகள் அடைவு கூடி
நித்தம் வெப்பம் பூமி மிகுத்து
சத்தம் இன்றி உயிர்கள் அழிவு
சாவு வந்து அணைக்குது பாரீர்

காலநிலை பொய்கா நீயும் கண்டு
காதல் கொண்டு இயற்கை காப்பீர்
பாலம் போலே இயற்கை அமைத்து
பாதுகாப்போம் புவிதனையே!

நகுலா சிவநாதன் 1728

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading