10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
ரஜிதா அரிச்சந்திரன்
என்று தீரும்..
நித்தமும் நீர்த்திவலை நீந்தும் மேடான
உத்தமி கன்னங்கள் உருக்குலைந்து போகிற
வேளையிலும் ஏங்கிஏங்கி வேதனையில் உறைந்து
ஈழமண்ணை முத்தமிடு வாள்
என்ன பயன் ஏறெடுத்துப் பாராத
அன்பு வரண்ட அழுகிய ஊரில்
இருப்பியல் இன்பம் இனிமை தொலைத்த
கருத்து வரண்ட நிலம்
பச்சயம் வாடி பகலை இழந்து
அச்சத்தால் அலைந்து அமைதி இழந்து
தாழ்ந்து தலைசாய்ந்த தண்ணீர்ப்பா ரம்நிறைந்த
தாழைபோல் கலங்கிநின் றதே
அவளும் இவளும் அனாதை அன்பு
தவளும் உலகமீதில் தண்ணீர் குமிழி
போலாய் உடைந்துடைந்து பொலபொல வெனவே
ஓலமிடு கின்றன ரே
இந்நிலையில் துன்பியல் ஈயும் நிலத்திலே
அந்திப் பொழுதென ஆதவன் நித்தம்
எழாது இருட்டை எழிலாய் தரவே
அழலாய் எரியும் தினம்
– கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன்
Author: Nada Mohan
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...