மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சர்வேஸ்வரி கதிரித்தம்பி.

“என்று தீரும் ”

என்று தீரும்…யாரிடம் கேட்பது…யாரிடம் சொல்வது…? இறையாட்சி எட்டுத்திக்கிலும் அங்கே
முறையிட முன்னுரிமை
கொடுப்பாரோ…?
கறைபட்ட தாய்மண்ணிலே
குறைவற்ற வளங்களும்…
நிறைவான தலைமுறையும்…
துறைமுக காலவரலாறும்…
ஆக்கிவைத்த யுகம்
தேக்கிவைத்த பண்பாடும்…
போக்கிவைக்க எடுத்தாளும் மனமே…
என்றுவரை இந்ஜெகம்…?அறிவாயா…?
அன்றுவரை காத்திருக்க
நீயும் நானும் உறுதி சொல்லத்தான்
முடியுமா….?
ஈகமும் தாகமும் போராட்ட பந்தம்…
அகமும் புறமும் நீதி
ஊற்றாக பாய்ந்தாலே
ஜெயம் கொண்ட ஜெகம்
ஆகுமே …
அதுநாள் வரை காத்திருக்க முடியுமா….?

– சர்வேஸ்வரி கதிரித்தம்பி.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading