20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
05.09.23
கவி இலக்கம்- 113
விடுமுறை களிப்பு
விடுமுறை பலமுறை வந்திடினும்
இம்முறை மனதுக்கு களிப்போடு
விருந்தானது
தாய் மண்ணில் திரும்ப கால்
பதித்ததும் துருதுருவென
கண்ணும் ,காலும் ஓடியது
பிறந்த புகுந்த வீடு
வாழை,மிளகாய்த் தோட்டமும்
வாலாட்டும் நன்றி உள்ள ஜீவனும்
துள்ளி விளையாடும் ஆடு,பூனைக்
குட்டியும்
அன்றைய ஞாபகம் வந்திடுச்சு
நல்லூர், செல்வச் சந்நதி திருவிழாவில்
ஐஸ்கிறீம் உண்டு நா ஊறிடுச்சு
உற்றார்,உறவினர் ,ஆசிரியர் கண்டு
உறவாடியதில் இருந்த நோயெல்லாம்
பறந்திடுச்சு
இன்றோடு முடியுது விடுமுறை
என்றது எரிச்சல்
விடுமுறை களிப்பு மீண்டும்
எப்போது வருமென ஏக்கமுடன்
பெருமூச்சு எறிந்திடுச்சு இதயம்.
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...