ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

19.09.23
ஆக்கம்-115
தலைப்பூ

ஊமைக் கவிதையில்
உருவாகும் உறுப்பு

அருமைக் கருவில்
ஆயிரம் உயிராகும்
சுவைப்பு

பூவுக்குள் பூகம்ப படைப்பு
காவி வரும் தலைப்பூ

தினம் மலரும் பூவானது
மணம் பரப்ப கொண்டையில்
சூடிட அழைப்பு

மலைக்கும் மடுவுக்கும் இயற்கை
அலையில் மோதும் பரிதவிப்பு

பிறப்பு இறப்புக்கு நடுவில்
போராடும் உழைப்பு

அகதி மொழியோடு விழி
பிதுங்கும் இதயத் துடிப்பு

வழமைக்குள் வாழ இளமையில்
வந்த புன்சிரிப்பு
இதுவோ சத்துப் பிடிப்பு

முதுமையில் வந்த வெறுப்பு
அதுவோ அனுபவப் படிப்பின்
வெடிப்பு .

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading