தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சிவச் சிவதர்சன்

வாரம் 239

“ஆறு மனமே”

மூவேளை வயிராற உண்டு செரிமானமின்றி அலைபவரும் உண்டு
ஒருவேளை உணவுக்கே திண்டாடுபவரும் உண்டு
சிறிதேனுமுண்டு உயிர்வாழவைத்த இறைவனுக்கு நன்றி கூறு
கடவுளின் கடாட்சம் உனக்குமுண்டு என்றெண்ணி ஆறுமனமே ஆறு

ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்
வண்டியுமொருநாள் ஓடத்திலேறும்.
அன்றாட வாழ்வில் அடிக்கடி நிகழும்
ஆரம்பமும் முடிவும் அடிக்கடி மாறும்
அரசனும் ஒருநாள் ஆண்டியாகலாம்
ஆண்டியுமொருநாள் அரசனாகலாம்
வாழ்க்கையின் வட்டம் இதுதான் என நம்பு
தயங்காது ஆறுமனமே ஆறு.

சுதந்திரக்காற்றை சுவாசிக்க தம்-
சுவாசக்காற்றை இழந்தவர் பலர்
சலுகைகள் பெற்று உயிர்வாழ விரும்பும்
நெஞ்சுரமில்லா கோழைகள் இன்றும் உளர்
அடிமை வாழ்வின் சுகத்தில் குளிர்காயும்
ஈனப்பதர்கள் விடுதலைத்தீயின் முன்னே வெறும் நீறு
விடுதலை அடையும் வரை சுதந்திரத்தாகமோ தணியாது
உறுதியாய் நம்பி ஆறுமனமே ஆறு.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading