சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1907!

மனிதத்தின் நேயமே…!

இனிதென வாய்த்த புவியிடை
வாழ்வினில் என்றுமே
புனிதமாய் வாழ்ந்திட வாய்த்த
வரமே மனித நேயம்
உயிர்களை உயர்வாய் உன்னத
நிலையாய் எண்ணி
உறவென மேவிட வேண்டுமே
நம்மிடை மனித நேயம்…

அன்னை தெரேசா போன்றதொரு
அகிலத்தின் தாய்மை
பின்னைப் பிறவியிலும் நின்றே
நிலைத்திட வைக்கும்
இன்னொரு பிறப்பு இனியும்
வேண்டாம் மனிதா மனிதம்
அன்பொடு காத்து அரவணைக்க
வேண்டுவது மனிதத்தின் நேயமே..
சிவதர்சனி இராகவன்
7/12/2023

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading