வசந்தா ஜெகதீசன்

உலகின் நிலைமாற
என்னென்ன கொண்டு வருகிறாய்….
உருண்டோடும் ஆண்டே
உலகாளும் வனப்பே
ஆண்டாண்டாய் நீயும்
அவனிக்கு விளக்கே
ஆதாரம் காட்டும் காலத்தின் மிடுக்கே

ஏற்றமாய் உழைப்பிட
மங்காப் புகழினை
மதிநுட்பத் திறனினை
தங்குதடையற்ற தைரிய வாழ்வினை
ஊக்குசக்தி உலகவிருத்தியாய்
தாங்கும் தரணிக்கும்
ஏங்கும் வாழ்விற்கும்
ஏதுகை எதுவோ
ஏற்றமே விளைவோ

மறுமலர்ச்சியின் ஆண்டாய்
மதிநுட்பத் திறனாய்
அதியுயர் விருதின்
அட்சய புவியாய்
வளர்மதி நிறைக்க
வான்புகழ் தளிர்க்க
என்னென்ன கொண்டு வந்தீர்
புத்தாண்டே மலர்க! புவிச்சரிதம் உயர்க!
நன்றி
மிக்கநன்றி

ஏற்றமிகு எழுகையும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading