” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் -253

தலைப்பு!
பிள்ளைக் கனி அமுது
…..

பிள்ளைக் கனியமுது – அதைப்
பெறுதல் தனியினிது
வெள்ளை மனத்தழகு – அதில்
விளையும் உருபுதிது!

பிஞ்சுக் கைஅசைவு – அட
பச்சைக் கிளிச்சிறகு
அஞ்சாப் புதுவரவு – பிள்ளை
அடங்காப் பெருந்துணிவு!

தவழுவும் கலைநிலவு – பிள்ளை
தமிழ்போல் தேன்பிழிவு
கவரும் விழிப்பதிவு – பிள்ளை
கரும்பாய்ச் சுவைச்செறிவு!

அரும்பின் இதழ்பொலிவு – பிள்ளை
அறிவில் வளர்தெளிவு
சுரும்பாய் அதுசுழலும் – அதைச்
சுற்றி வரமகிழும்!

பிள்ளைக் கனியமுது – அதை
வெல்வ தினிஅரிது!
துள்ளும் மொழிமழலை – அது
தொலைக்கும் நம்கவலை!

அபிராமி கவிதாசன்
13.02.2024

Nada Mohan
Author: Nada Mohan