சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

பிள்ளை கனி இல்லை என்று
புலம்பி ஆச்சி
உள்ள கோயில் குளம் எல்லாம்
செய்தா நேர்த்தி
எல்லையிலே றோட்டோர அரசை சுற்றி
இடுப்பு நோக 108
குட நீர் ஊத்தி
எத்தனையோ பிள்ளை
பிறந்து சாக
என்னையும் என் தம்பியையும்
காத்தேன் என்பாள்.

பிள்ளை இல்லா குறை பெரிது
விசேடம் என்றால்
பெரிதாக மதிகார் சொந்த காரர் கூட
தள்ளி வைப்பார் சபையில்
சகுன பிழை என்பார்கள்
தனக்குத்தான் பின் சொத்து என்று ஆள் ஆள்
சொந்தம் எல்லாம் அடிபடுங்கள்
என்ற குறை இருந்தாலும் பிள்ளை ஒன்றை
எடுத்தேனும் வளர்க்கோணும்
இல்லை என்றால்
பின்னடியில் நோய் துன்பம் சாவு வந்தால்
பிணம் நாறி புழு சிந்தும் நிலை உண்டாகும் என்பது என் ஆச்சி சொன்ன வேத வாக்கு
எத்தனை பேர் படும்பாடு
தெரியும் தானே.

Nada Mohan
Author: Nada Mohan