பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ரஜனி அன்ரன்

இப்போதெல்லாம்……கவி…ரஜனி அன்ரன் (B.A) 29.02.2024

அப்போதெல்லாம் ஆரோக்கிய வாழ்வு
இப்போதெல்லாம் உலகை உலுக்கும் கொடிய நோய்கள்
அச்சொட்டாய் வீட்டிற்கு ஒருவரென
விடாமல் துரத்துகிறது சக்கரை வியாதி
இன்று யாரைக் கேட்டாலும்
இரத்த அழுத்தம் சக்கரை வியாதியாம்
மருத்துவரும் கொடுக்கிறார் தாராளமாய்
மருந்து மாத்திரைகளை அள்ளி !

மூன்றுவேளை உணவோடு
முழுங்குகின்றார் மாத்திரைகளையும்
மாத்திரைகளின்றி வாழ்வு இல்லை
மருத்துவ உலகும் வியாபார நோக்கில் இப்போ
மக்களும் மனஅழுத்தத்தோடு நித்தமும் போராட்டம்
கனதியான மனதோடும் திண்டாட்டம் !

இப்போதெல்லாம் மக்கள்
மருந்தே உணவாக உணவே மருந்தாக
விருந்தையும் மருந்தாக்கி
அருந்துகின்றார் விருப்பின்றி
தொழில்நுட்பமும் கண்டுபிடிப்புக்களும்
முன்னேற்றம் கண்ட போதும்
மருத்துவ உலகின் மகத்தான சேவை
மக்கள் மனதிலோ கசப்பான சோபை !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading