நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

செந்தூரப்பூவே

சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக நீயும் ஒளிரும் நட்சத்திரம்//
சிங்காரங் கண்டேன் சிலுசிலுக்கும் பூவிலே//

ரீங்காரம் இடும் வண்டாகிப் பறந்தேன்//
ஊஞ்சல் கட்டியே உல்லாசமாய் ஆடவே//
எண்ணமே எங்கோ போகுதே தன்னாலே//
தன்னானே பாடவா தாமரைக் கொடியே//

காணாத காட்சியாய் கண்ணிலே மலர்ந்ததே//
வீணான நினைவு தோற்றுமே ஓடுதே//
பசுந்தளிராய் பக்குவமாய் விரிந்தாய் மனசிலே//
இனிக்குதே சுவையாய் இளமையெனும் பூங்காற்றே//

சிவரூபன் சர்வேஸ்வரி