செந்தூரப்பூவே

சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக நீயும் ஒளிரும் நட்சத்திரம்//
சிங்காரங் கண்டேன் சிலுசிலுக்கும் பூவிலே//

ரீங்காரம் இடும் வண்டாகிப் பறந்தேன்//
ஊஞ்சல் கட்டியே உல்லாசமாய் ஆடவே//
எண்ணமே எங்கோ போகுதே தன்னாலே//
தன்னானே பாடவா தாமரைக் கொடியே//

காணாத காட்சியாய் கண்ணிலே மலர்ந்ததே//
வீணான நினைவு தோற்றுமே ஓடுதே//
பசுந்தளிராய் பக்குவமாய் விரிந்தாய் மனசிலே//
இனிக்குதே சுவையாய் இளமையெனும் பூங்காற்றே//

சிவரூபன் சர்வேஸ்வரி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading