திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

Sakthithasan

சந்தம் சிந்தும் சந்திப்பு 261
பெருமை
விண்ணோடு மோதும் மேகங்கள்
என்னுள்ளே மோதும் கேள்விகள்
ஆழியில் கலந்திடும் மழைத்துளிகள்
ஆழத்தை உணர்த்திடும் மனவலிகள்

இரவைப் பகல் அணைத்திடுதா, இல்லைப் பகலுள் இரவு கரைந்திடுதா ?
வானில் நிலவு மிதந்திடுதா ? இல்லை
நிலவை வானம் வலம் வருதா?

உள்ளத்தில் உணர்வுகள் உதித்தனவா ? இல்லை
உள்ளமே உணர்வினுள் அமிழ்ந்ததுவா?
கணத்தினில் மாறிடும் சுபாவத்தின் சுரத்தினை
கனத்துடன் இசைத்திடும் மனதின் வனப்பிது

சுழன்றிடும் இகத்தின் நிகழ்வினை அறிந்து
சுயத்தின் திறனின் அளவினை உணர்ந்து
சுயநலம் மறந்து பொதுநலம் நினைந்து
சுரந்திடும் கருணையைப் போற்றிடு மனமே !

நிகழ்ந்திடும் நிகழ்வுகள் அனைத்தையும்
நிகழ்த்திடும் வல்லமை உடையோன்
நிகழ்வினைத் தேடியே நாமும் இங்கு
நிறைவுடை பிறப்பினை எடுத்தோம்

வருபவை எல்லாம் எமக்காய் தேடும்
விரும்பிய அனுபவப் புரிதல்கள்
வாழ்க்கையின் சூட்சுமம் தெரிந்தால்
வாழ்வெல்லாம் நதியினில் வெள்ளம்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading