Sakthithasan

சந்தம் சிந்தும் சந்திப்பு 261
பெருமை
விண்ணோடு மோதும் மேகங்கள்
என்னுள்ளே மோதும் கேள்விகள்
ஆழியில் கலந்திடும் மழைத்துளிகள்
ஆழத்தை உணர்த்திடும் மனவலிகள்

இரவைப் பகல் அணைத்திடுதா, இல்லைப் பகலுள் இரவு கரைந்திடுதா ?
வானில் நிலவு மிதந்திடுதா ? இல்லை
நிலவை வானம் வலம் வருதா?

உள்ளத்தில் உணர்வுகள் உதித்தனவா ? இல்லை
உள்ளமே உணர்வினுள் அமிழ்ந்ததுவா?
கணத்தினில் மாறிடும் சுபாவத்தின் சுரத்தினை
கனத்துடன் இசைத்திடும் மனதின் வனப்பிது

சுழன்றிடும் இகத்தின் நிகழ்வினை அறிந்து
சுயத்தின் திறனின் அளவினை உணர்ந்து
சுயநலம் மறந்து பொதுநலம் நினைந்து
சுரந்திடும் கருணையைப் போற்றிடு மனமே !

நிகழ்ந்திடும் நிகழ்வுகள் அனைத்தையும்
நிகழ்த்திடும் வல்லமை உடையோன்
நிகழ்வினைத் தேடியே நாமும் இங்கு
நிறைவுடை பிறப்பினை எடுத்தோம்

வருபவை எல்லாம் எமக்காய் தேடும்
விரும்பிய அனுபவப் புரிதல்கள்
வாழ்க்கையின் சூட்சுமம் தெரிந்தால்
வாழ்வெல்லாம் நதியினில் வெள்ளம்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading