பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-23.04.2024
இலக்கம்-261
“நேரம்”
—————
நல்ல நாளில் நல்ல நேரமதில்
நல்ல நிகழ்வுகள் நிறைவாச்சு
நேரம் பொன்னானது
கடந்து போனால்
மீள பெற முடியாதாச்சு
கப்பல் கரை சேரும் நேரம் பார்த்து
காத்துக் கிடந்து
நடுக் கடலில் அவலமாச்சு
உரை நிகழ்த்தும் நேரம் குறித்து கொடுத்தும்
மேடைப் பேச்சு கூடிப்போச்சு
நிரையில் பாணுக்காக காத்து கிடந்த நேரமதில்
தாயக நினைவில் மறக்க முடியாதாச்சு
அம்மியில் அரைத்து சாப்பிட்ட நேரம்
உடம்பு சுகதேகியாச்சு
தலை முடியில் நரை வரும் நேரம் பார்த்து
கண்ணாடி முன் பிடுங்கிய நினைவாச்சு
நாய் குரைக்கும் நேரமதில்
கள்ளன் வந்துட்டான் நினைவாச்சு
நல்ல நேரம் மரண யோகம் பஞ்சாங்கம் கணிப்பதும் பலதுமாச்சு
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading