அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

நேவிஸ் பிலிப். “ தீதும் நன்றும் “

கவி இல (134) 23/05/24

தீதும் நன்றும்
பிறர் தர வாராதெனில்
அது எங்கே ?என்று
தேடிப் பார்க்கின்றேன்

எண்ணம் வலிமையானால்
ஏற்றம் பெற்றிடலாம்
நற் செயல் ஆற்றிவிடின்
பண்போடு வாழ்ந்திடலாம்

வித்தொன்றை நட்டுவைத்தால்
முளைத்து வரும் நற்செடியும்
விளைந்து பயன் நல்கிடுமே
நேர்மறைஎண்ணம் கொண்டு
வாழ்ந்திடும் வாழ்வுதனில்
நன்மைகள் பெருகிடுமே

நெஞ்சிலே வஞ்சம் கொண்டு
சுத்தமில்லா வாக்கதனை
வித்தாக விதைத்திட்டாலோ
விச செடியாயது வளர்ந்து
நச்சுக் காய்கள் தந்து
தீதான எண்ணங்கள்
பாரெங்கும் பரவிடுமே

நல்லெண்ண வாழ்வு
திண்ணமாய் அமைந்து விட்டால்
தீதென்று ஏதுமில்லை
எங்கும் என்றும் நலமே காண
பசுமை உலகம் செழித்திடுமே..

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan