மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

தீதும் நன்றும்

கெங்கா ஸ்ரான்லி

செய்த செயல் புண்ணியம்
செய்யாவிட்டால் பாவமுமில்லை
எண்ணிய கரும்ம் தீது
எடுத்ததை செய்யும் போது
வாய்மையே வெல்லும் என்றும்
வாய்ச்சொல் நல்ல தென்றால்
பொய்மை பொய்க்கும் ஒருநாள்
உண்மை வெளியில் வருகையில்
எல்லோரும் ஓரினம் உறவுகள்
உண்மையா அதுவும் இம்மையில்
பலரும் பேணும் சுயநலம்
பண்பில் அவரில் வெளிப்படும்
சொல்லில் அன்பின் வெளிப்படல்
செய்கையில் அகத்தில் கலப்படம்
உண்மையாக செய்தால் தீதும் நன்று
உண்மையில்லாத்து நன்றும் தீது
நேர்மையில் தீதும் நன்றும்
பார்வையைப் பொறுத்திருக்குமே!

Nada Mohan
Author: Nada Mohan