அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

Selvi Nithianandan

பெண்ணே

வாழ்வெனும் சக்கரம்
வரமாகும் பொறுப்பு
வலிகள் மெளனம்
வாஞ்சையாகும் சிறப்பு

சிதறும் வார்த்தை
சீர்பெறும் விருப்பு
சினமாகும் கருத்தை
சீக்கிரம் மறைப்பு

மங்கையர் கணிப்பு
மண்ணிலே நிலைப்பு
மகுடமாய் இருப்பு
மகத்துவ நிறைப்பு

பெண்ணே பெருமை
போற்றிடும் திறமை
பெண்மையேபொறுமை
பேறாம் பெருஞ்சிறப்பு.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading