தடமது படைத்தெழும் தனித்துவம்…….

இரா.விஜயகௌரி

சிறு விரல்தொட்டெழும் மகத்துவம்
சித்திரம் வரைந்திடும் சரித்திரம்
வித்தகம் உணர்ந்து விரல் வழி இழைந்து
பொக்கிஷம் நிறைந்திடும் பேருவகை

பாமுகத்தளத்தின் தின வார்ப்பு-நம்
இளையவர் வலுவதன் பெரும் சேர்ப்பு
தமிழமுதினை உண்டெழும் பெருமகிழ்வு
ஆளுமை உணர்ந்தெழும் ஆர்பரிப்பு

உலகினில் எங்கும் பரந்திழைந்தோம்
தாய்மடி இணையும் வலைப்பின்னல்
உறவாய் உயிர்ப்பாய் களமிணைந்து
உயர்விடும் உன்னத மொழிக்களமாம்

ஆண்டுகள் இருபத்தேழினில் பெரும் உதயம்
இசைந்தவர் இழைந்தவர் கரமிணைய
இன்றைய இளையோர் படையலிட
ஆனந்தம் கொண்டெழும் தனித்துவமாம்

ஆம் நடந்தவை யாவும் வழித்தடங்கள்
சுவடுகள் அனைத்திலும் இளையவர்கள்
மலர்களைத் தொடுத்தொரு மணிமகுடம்
வாழ்வின் பெருந்தேர் பவனி இது

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading