அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

தடமது படைத்தெழும் தனித்துவம்…….

இரா.விஜயகௌரி

சிறு விரல்தொட்டெழும் மகத்துவம்
சித்திரம் வரைந்திடும் சரித்திரம்
வித்தகம் உணர்ந்து விரல் வழி இழைந்து
பொக்கிஷம் நிறைந்திடும் பேருவகை

பாமுகத்தளத்தின் தின வார்ப்பு-நம்
இளையவர் வலுவதன் பெரும் சேர்ப்பு
தமிழமுதினை உண்டெழும் பெருமகிழ்வு
ஆளுமை உணர்ந்தெழும் ஆர்பரிப்பு

உலகினில் எங்கும் பரந்திழைந்தோம்
தாய்மடி இணையும் வலைப்பின்னல்
உறவாய் உயிர்ப்பாய் களமிணைந்து
உயர்விடும் உன்னத மொழிக்களமாம்

ஆண்டுகள் இருபத்தேழினில் பெரும் உதயம்
இசைந்தவர் இழைந்தவர் கரமிணைய
இன்றைய இளையோர் படையலிட
ஆனந்தம் கொண்டெழும் தனித்துவமாம்

ஆம் நடந்தவை யாவும் வழித்தடங்கள்
சுவடுகள் அனைத்திலும் இளையவர்கள்
மலர்களைத் தொடுத்தொரு மணிமகுடம்
வாழ்வின் பெருந்தேர் பவனி இது

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading