” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தடமது படைத்தெழும் தனித்துவம்…….

இரா.விஜயகௌரி

சிறு விரல்தொட்டெழும் மகத்துவம்
சித்திரம் வரைந்திடும் சரித்திரம்
வித்தகம் உணர்ந்து விரல் வழி இழைந்து
பொக்கிஷம் நிறைந்திடும் பேருவகை

பாமுகத்தளத்தின் தின வார்ப்பு-நம்
இளையவர் வலுவதன் பெரும் சேர்ப்பு
தமிழமுதினை உண்டெழும் பெருமகிழ்வு
ஆளுமை உணர்ந்தெழும் ஆர்பரிப்பு

உலகினில் எங்கும் பரந்திழைந்தோம்
தாய்மடி இணையும் வலைப்பின்னல்
உறவாய் உயிர்ப்பாய் களமிணைந்து
உயர்விடும் உன்னத மொழிக்களமாம்

ஆண்டுகள் இருபத்தேழினில் பெரும் உதயம்
இசைந்தவர் இழைந்தவர் கரமிணைய
இன்றைய இளையோர் படையலிட
ஆனந்தம் கொண்டெழும் தனித்துவமாம்

ஆம் நடந்தவை யாவும் வழித்தடங்கள்
சுவடுகள் அனைத்திலும் இளையவர்கள்
மலர்களைத் தொடுத்தொரு மணிமகுடம்
வாழ்வின் பெருந்தேர் பவனி இது

Nada Mohan
Author: Nada Mohan