நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-40
11-06-2024

பாமுகமே வாழி

ஐரோப்பாவின் லண்டன் தமிழ் வானோலி
அகிலமெங்கும் அலை ஓசை துலங்கி
எண்ணற்ற ஆர்வலர் விளங்கி
27ம் அகவை இனிதே காண இதயபூர்வ வாழ்த்துகள்.

உலகமெங்கும் கலைஞரை வளர்த்து
ஊக்கம் கொடுப்பதை நோக்காய் கொண்டு
பாக்களும் இயற்றத் திறமை புனைந்து
பாரெல்லாம் போற்றும் பாமுகமே வாழீ.

தனிமையை அகற்றுவது மட்டன்றி
சமையலறை வரை பேசுமுகமாய் நின்று
எட்டுத்திக்கும் உறவுகள் பெருகி
எண்ணற்ற பொது அறிவொளி புகட்டி

பெண்ணடிமை காட்டிய காலம் போய்
பூட்டியவீட்டிலே பெண் வளர்ச்சி பேசி
ஊட்டிய வானொலி பாமுகமே
பாரதியா நீ பரிதவிப்போர்க்கு உதவியா?

பாமுக அதிபரும், பாரியரும்
பாரினில் தமிழை வளர்க்க பாடு பட்டு
வளரும் கலைஞருடன், வளர்ந்திட்ட உறவுகளும் சேர்ந்து இயங்கி பல்லாண்டு வாழியவே.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan