” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-40
11-06-2024

பாமுகமே வாழி

ஐரோப்பாவின் லண்டன் தமிழ் வானோலி
அகிலமெங்கும் அலை ஓசை துலங்கி
எண்ணற்ற ஆர்வலர் விளங்கி
27ம் அகவை இனிதே காண இதயபூர்வ வாழ்த்துகள்.

உலகமெங்கும் கலைஞரை வளர்த்து
ஊக்கம் கொடுப்பதை நோக்காய் கொண்டு
பாக்களும் இயற்றத் திறமை புனைந்து
பாரெல்லாம் போற்றும் பாமுகமே வாழீ.

தனிமையை அகற்றுவது மட்டன்றி
சமையலறை வரை பேசுமுகமாய் நின்று
எட்டுத்திக்கும் உறவுகள் பெருகி
எண்ணற்ற பொது அறிவொளி புகட்டி

பெண்ணடிமை காட்டிய காலம் போய்
பூட்டியவீட்டிலே பெண் வளர்ச்சி பேசி
ஊட்டிய வானொலி பாமுகமே
பாரதியா நீ பரிதவிப்போர்க்கு உதவியா?

பாமுக அதிபரும், பாரியரும்
பாரினில் தமிழை வளர்க்க பாடு பட்டு
வளரும் கலைஞருடன், வளர்ந்திட்ட உறவுகளும் சேர்ந்து இயங்கி பல்லாண்டு வாழியவே.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan