“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

ஷர்ளா தரன்

பாமுகம் பாரா முகம்
ஓரம் காட்டாது ஒன்றாய் சேர்க்கும் முகம்
பாரில் உதித்து பல ஆண்டு கண்ட முகம்
சேருவோரை ஒன்றாய் சேர்க்கும் முகம்
நீ வாழி பல்லாண்டு வாழி

கவிக்கு ஒரு பாதை
கவிதை விரும்பிக்கு ஒரு வளம்
வாரத்துக்கு ஒன்று
வரி வரியாய் தலைப்புகள் கண்டு
மாரி வெள்ளம் போல்
மடையாய் ஓடும் பா
தடுக்கி விழுந்தோரை
தட்டி எழுப்பும் முகம்
பாமுகம் நீ வாழி
பல்லாண்டு வாழி

உதட்டில் தவழ்வதை
ஊரறிய வைக்கும் முகம்
மனதின் எண்ணத்தை
மனங்களில் பதிக்கும் முகம்
கனத்த இதயத்திற்கும்
கனிவுதரும் உன் கவி
பனித் துளி போல்
படரும் உன் கவி
நீ வாழி
பல்லாண்டு வாழி

ஷர்ளா தரன்

Nada Mohan
Author: Nada Mohan