நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

ஷர்ளா தரன்

பாமுகம் பாரா முகம்
ஓரம் காட்டாது ஒன்றாய் சேர்க்கும் முகம்
பாரில் உதித்து பல ஆண்டு கண்ட முகம்
சேருவோரை ஒன்றாய் சேர்க்கும் முகம்
நீ வாழி பல்லாண்டு வாழி

கவிக்கு ஒரு பாதை
கவிதை விரும்பிக்கு ஒரு வளம்
வாரத்துக்கு ஒன்று
வரி வரியாய் தலைப்புகள் கண்டு
மாரி வெள்ளம் போல்
மடையாய் ஓடும் பா
தடுக்கி விழுந்தோரை
தட்டி எழுப்பும் முகம்
பாமுகம் நீ வாழி
பல்லாண்டு வாழி

உதட்டில் தவழ்வதை
ஊரறிய வைக்கும் முகம்
மனதின் எண்ணத்தை
மனங்களில் பதிக்கும் முகம்
கனத்த இதயத்திற்கும்
கனிவுதரும் உன் கவி
பனித் துளி போல்
படரும் உன் கவி
நீ வாழி
பல்லாண்டு வாழி

ஷர்ளா தரன்

Nada Mohan
Author: Nada Mohan