10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
சந்தம் சிந்தும் சந்திப்பு வசந்தம். வசந்தத்தில் விழா
வைக்கின்ற பூம்புகார்
வரும் கோயில் திருவிழா
வழமையாய் வசந்தத்தில்
வசந்தம் காணும்
வண்ண வண்ண பூஞ்சோலை
வைகாசி ஆனி
ஆடி ஆவணியில்
வையகம் காணும்
வசந்தத்தின் உச்சம்
தோட்ட நிலம் எல்லாம்
தோன்றும் காய்கறியாய்
வாட்டும் தாகம்
வருத்தும் புளுக்கம்
வசந்தம் இல்லை என்றால்
வையகம் விடியாதே!
-சிவரஞ்சனி கலைச்செல்வன்-
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.