18
Dec
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
18
Dec
விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை...
18
Dec
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025
நல்லூர்தந்த ஞானச்சுடர்...
அடையாளம்
சிவதர்சனி
வியாழன் கவி 1997
அடையாளம்..
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே
அவர்க்கென்று குணமுண்டு
என்ற கவி நாமக்கல் இராமலிங்கம்
பிள்ளை
அழுத்தமாய்ச் சொன்ன பின்னே
நாமோ
அடையாளம் அறிந்து அதை நிலை
நிறுத்தி
பின் வரும் சந்ததிக்கும் உணர்த்திடல்
முறையன்றோ…!
முந்தோன்றிய மூத்த
மொழியே நம் தமிழ்
அதை முனைப்போடு காத்திட
ஓர் இனம்
உயிர்த் தியாகம் செய்த
கதை எப்படிமறப்பதாம்
நாடிழந்து அகதியென நாமம்
நாம் சுமந்தே அலைய
நமக்கென அடையாளமாய்
மாறியதோ அகதிஎனும் நாமம்..
விழித்திடுவோம் தமிழர் நாம்
மொழியே நம் அடையாளம்
அதுவே பண்பாட்டின் உயிர்
நாடியென உணர்ந்திடுவோம்
எம் சந்ததி மொழி மறந்து
மந்தைகளாய் இலக்கின்றி
வாழ்தல் தவிர்க்க மொழியொடு
வாழவைப்பதே கடமை என்றே
மனத்திலே இருத்திடுவோம்…
சிவதர்சனி இராகவன்
19/6/2024
Author: Nada Mohan
19
Dec
-
By
- 0 comments
அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய்
நீதியின் பக்கம் தங்குவாய்
மெய்யுரைக்காது பல வாய்
பொய்யை...
17
Dec
-
By
- 0 comments
குட்டக் குட்ட குனிந்தே கிடப்பதா
முட்டுக் கொடுத்தே வாழ்க்கை நகர்வதா
எத்தனை காலம்...
16
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இன்று பாரதி இருந்திருந்தால்...
புதுக்கவியாளன் பாரதியே
படைத்தெழு படைப்பே பாரெங்கும்
முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...