கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

கமலா ஜெயபாலன்

பள்ளிப் பருவம்
துள்ளித் திரிந்த காலம்
துக்காக நடந்த காலம்
பள்ளிப் பருவ காலம்
பயமறியா பரவச காலம்
அள்ளி அணைத்திட அன்னையும்
அன்பு காட்டிய ஆசானும்
கிள்ளி விளையாட நண்பர்களும்
களிதட்டு மறிக்க ஊரவரும்
என்ன பருவமது
இன்பத்தின் சுரங்கமது/

அறிவும் பெருகி வர
ஆற்றலும் தேடி வர
குறியும் ஒன்றாய் கூடிவர
கல்வியில் கரிசனை வர
வெறியுடன் பாடம் கற்று
வெற்றியும் பெற்று வாழ்வில்
தறிகெட்டு போகாமல் நாளும்
தரத்துடன் நெறியில் நின்று
நண்பர்கள் சேர்ந்த
பள்ளிப் பருவம்
மீண்டும் வருமா ஒரமுறை/

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading